பழநி: பழநி மலைக்கோயிலுக்கு செல்வதற்காக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்கள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிக்க பக்தர்களுக்கு ரூ.10, ரூ.100 என 2 முறைகளில் டிக்கெட் விநியோகிக்கப்படுகின்றன. டிக்கெட் பெறுவதற்காக பக்தர்கள் வரிசையில் நின்றபோது முன் நுழைவாயில் வழியாக குறிப்பிட்ட நபர்களை லஞ்சம் பெற்று அனுமதித்ததாக அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டிகள் பாலமுருகன், லோகநாதன் மற்றும் இவர்களை கண்காணிக்க தவறிய மேற்பார்வையாளர் சம்பத் ஆகியோர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டதாக பழநி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பழநி மலைக்கோயிலில் 5 மாதங்களுக்கு பின் மீண்டும் ரோப்கார் இயக்கம் துவங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….
The post பழநி கோயில் வின்சில் பயணம் லஞ்சம் வாங்கிய 3 ஊழியர்கள் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.