×

மாவட்டம் டூவீலரில் வந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

சிவகாசி, மே 14:  டூவீலரில் வந்த பெண்ணிடம் செயின் பறித்து சென்ற மர்ம  ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (26). இவர் தனது டூவீலரில் என்ஜிஓ காலனி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த இருவர், ஐஸ்வர்யா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.

Tags : district ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்