×

மின்கம்பத்தில் பைக் மோதி திருச்சி வாலிபர் பரிதாப பலி

திருச்சி, மே 14: திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சுரேந்திரன்(23). இவரும், இதே பகுதி கல்லுக்கார தெருவை சேர்ந்த நண்பர் கோகுல்நாத்(23) என்பவரும் பைக்கில் நேற்றுமுன்தினம் கல்லணைக்கு சென்றனர். அங்கு குளித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். பைக்கை சுரேந்திரன் ஓட்டிவந்தார். கல்லணை ரோடு பொன்னுரங்கபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்திலிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் சுரேந்திரன் பலத்த காயமடைந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ்சில் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் சுரேந்திரன் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Trichy ,pirate ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்