×

தென்னகத்து காஷ்மீரின் அவலநிலை தேவதானப்பட்டியில் வெயிலால் தெருக்கள்

தேவதானப்பட்டி, மே 14: தேவதானப்பட்டி பகுதிகளில் பகலில் வெயில் சுட்டெறிப்பதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. தேவதானப்பட்டி பகுதிகளில் உள்ள கிராமங்களில் கத்தரிவெயில் பகலில் சுட்டெிரித்து வருகிறது. இதனால் காலை 10மணியில் இருந்து மாலை 5மணி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது.  கிராமங்களில் தோட்டவேலைக்களுக்கு செல்லும் கூலித்தொழிலாளிகள் உள்பட  வீடுகளில் உள்ளவர்கள் என அனைவரும் மதிய நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கி கிடங்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றன.

Tags : southwest ,Kashmir ,
× RELATED நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை...