×

முசிறியில் துருப்பிடித்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

தா.பேட்டை, மே 14: முசிறி பார்வதிபுரத்தில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறி பார்வதிபுரம் 3வது தெருவில் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் கூறும்போது, மின்வாரியத்தினர் மின்கம்பிகள் கொண்டு செல்வதற்கு இரும்பினால் ஆன மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கம்பத்தின் அடிப்பகுதி துருபிடித்து ஓட்டை விழுந்துள்ளது. கம்பத்தின் அருகே குழந்தைகள் தினசரி விளையாடுகின்றனர். மின்கம்பம் உடைந்து விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி என்பதால் மின்கம்பத்தை கடந்து செல்லும்போது மிகவும் அச்சத்தில் செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்நத் சமூக ஆர்வலர்  மின்வாரிய துறையினரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்கம்பம் உடைந்து விழுந்து அசம்பாவிதங்கள் நிகழும் முன் மின்வாரிய துறையினர் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி  அமைக்க வேண்டும் என்று கூறினார். பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றாமல் மின்வாரிய துறையினர் அலட்சியமாக இருந்து வருவது  அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED நவல்பட்டு வாக்குசாவடியில் வாக்கு...