×

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வருசநாடு, மே 14: மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகவிலைப்படி முறையாக வழங்க வழங்க வலியுறுத்தி மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள்,  சத்துணவு பணியாளர்கள் சங்கத்தினர்  நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய, மாநில அரசைக் கண்டித்தும், முறையாக பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடும்பாறை ஒன்றிய ஆணையாளர்கள் திருப்பதிவாசகன், கருப்பசாமி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பாக ரவி, நிலவழகன், குமரன், துணை மண்டலத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஐயப்பன், உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்புரையாற்றி பேசினர்.

Tags : government employees ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்