×

மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்தரங்கம்

சிவகங்கை, மே 14:  சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காரல்மார்க்ஸ் 200வது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரபாண்டி தலைமை வகித்து பேசினார். ஒன்றிய செயலாளர் மதி வரவேற்றார். மண்ணில் ஓர் சொர்க்கம், மாமேதை கார்ல்மார்க்சின் விஞ்ஞான கனவு என்கிற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். மார்க்சும் அவரது கோட்டும் என்கிற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ் பேசினார். இதில் நிர்வாகிகள் தண்டியப்பன், வீரையா, முத்துராமலிங்கபூபதி, மணியம்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Marxist ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...