×

முத்துப்பேட்டையில் மனைவியுடன் தகராறு: கணவன் தற்கொலை

முத்துப்பேட்டை, மே 14: நாகை மாவட்டம் திருப்பூண்டி மீன் மார்க்கெட் தெருவை  சேர்ந்தவர் ஹாஜா மைதீன்(41). இவர் முத்துப்பேட்டை மஜிதியா தெருவை சேர்ந்த பழ வியாபாரி ஜாஹீர் உசேன் மகள் பாருக் பானுவை திருமணம் செய்து கொண்டு இங்கேயே வசித்து வந்தார். மேலும் ஹாஜா மைதீன் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டையில் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ஹாஜா மைதீன் சொந்த ஊரான திருப்பூண்டி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினார். பின்னர் கடும் குடிபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும், மனைவி பாருக் பானுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீட்டை விட்டு சென்ற ஹாஜா மைதீன் பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் சிலர் வாக்கிங் சென்றபோது அதே சாலை மங்களூர் சில்லடி வாய்க்காலில் ஹாஜா மைதீன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு சடலமாக கிடப்பதை பார்த்தனர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் ஆகியோர் ஹாஜா மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Murder suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை