×

தி.பூண்டி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் கஜா புயலில் சாய்ந்தும் 6 மாதமாக அகற்றப்படாமல் கிடக்கும் மரங்கள்

திருத்துறைப்பூண்டி, மே 14: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் கஜா புயலில் சாய்ந்தும் 6 மாதங்களாக அகற்றப்படாமல் கிடக்கும் மரங்களை உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர பகுதிகளில் கஜா புயலில் சேதமடைந்த மின் கம்பங்கள், மரங்கள் பல இடங்களில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதுபோன்று அனைத்து பள்ளி வளாகங்களிலும் சாய்ந்துள்ள மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஜா புயலில் சாய்ந்த மரங்களை ஆறு மாதங்களாகியும் இன்னும் அப்புறப்படுத்த நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.

வரும் ஜூன் மாதம் பள்ளி திறக்க வேண்டும். பள்ளி திறப்பதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் சாய்ந்து கிடக்கின்ற அனைத்து மரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும், இதேபோன்று திருத்துறைப்பூண்டி பகுதியிலுள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும் சாய்ந்து கிடக்கின்ற மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bundi Government ,
× RELATED உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை...