×

திருவையாறில் குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய மின்மோட்டார் பறிமுதல்

திருவையாறு, மே 14: திருவையாறு ஒன்றியம் மன்னார்சமுத்திரம் ஊராட்சியில் வீட்டுக்கு இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா என்று ஒன்றிய ஆணையர்கள் சாமிநாதன், சுஜாதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன் மற்றும் கள பணியாளர்கள்  ஆய்வு செயதனர். அப்போது மன்னார்சமுத்திரம் ஊராட்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நீலமேகம் என்பவர் பிரதான குடிநீர் குழாயிலிருந்து மின்மோட்டார் மூலம் நேரடியாக குடிநீர் எடுப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.

Tags :
× RELATED ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை...