×

மாணவர் கொலை வழக்கில் கோர்ட்டில் வாலிபர் சரண்

மதுரை, மே 14: உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பிளேடு பாண்டி. இவர் உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரை மதுரையில் ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகர் சுடுகாடு அருகில் கடந்த வாரம் ஒரு கும்பல் கொலை செய்தது. இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், கொண்டையம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மகன் அஜித் (23) மதுரை ேஜ.எம்.4 கோர்ட்டில் நேற்று இவ்வழக்கு தொடர்பாக சரணடைந்தார். அவரை வரும் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் கவுதமன் உத்தரவிட்டார். இதனையடுத்து அஜித் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...