×

7 இளம் பெண்கள் ஒரே வாரத்தில் மாயம்

மதுரை, மே 14: மதுரை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் மாயமான 7 இளம் பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஒச்சத்தேவர். இவரது 17 வயது மகள் திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். உசிலம்பட்டி அருகே புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது 17 வயது மகள் கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உத்தமநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார். இவரது 14 வயது மகள் 8ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தவர் கடந்த 11ம் தேதி மாயமானார். வாடிப்பட்டி அருகே டி. ஆண்டிபட்டி இந்திரா காலனியை சேர்ந்த கருப்பையா மகள் பூங்கொடி(22) கடந்த 6ம் தேதி மாயமானார். வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேரையூர் பகுதியைச் சேர்ந்த மணியப்பன் மகள் பாண்டிச்செல்வி(20). டி.கல்லுப்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை சோலையழகுபுரத்தை சேர்ந்த விக்னேஷ். இவரது 17 வயது மகள் நேற்று வீட்டை வீட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பஞ்சு மகள் கார்த்திகா(22). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 4ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Tags : girls ,
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே