×

பொன்னமராவதி அருகே தண்ணீரில்லா கிணற்றில் முதியவர் சடலம் மீட்பு

புதுக்கோட்டை, மே14: பொன்னமராவதி அருகே தண்ணீரில்லா கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்த முதியவர் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி என்ற கிராமத்தில்  விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்தார். துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி போலீசார் கிணற்றில் கிடந்த பிரேதத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியோடு மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இறந்தவர் யார் என்றும் கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளி விட்டு கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர் தங்களது  கிராமத்தை சார்ந்தவர் இல்லை என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறி வருகின்றனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு