மணமேல்குடி, மே14: மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தை, கமாண்டர் ஜூரோஜிட் டே ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் உள்ள தளவாட பொருட்கள், பதிவேடுகள், வாகனங்கள், அதிவேக ரோந்து படகு ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் போலீசாரிடம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலீசாருடன் உடனிருந்தனர்.