×

பொன்னமராவதி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

பொன்னமராவதி, மே 14: பொன்னமராவதி அருகே மரத்தில் ஏறி ஆட்டு இலை வெட்டிய விவசாயி தடுமாறி விழுந்து இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குமாரபட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(40). விவசாயி. நேற்று முன்தினம் அங்குள்ள மரத்தில் ஏறி ஆட்டுக்கு இலைகள் (தளை) வெட்டியுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு பொன்னமராவதி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி நேற்று சுப்பிரமணியன் இறந்தார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...