தா.பழூர், மே 14: தா.பழூர் அருகே நடந்த தீவிபத்தில் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து சாம்பலானது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (58). இவர் வீட்டின் அருகே வைக்கோல் போர் வைத்திருந்தார்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முட்களில் எரிந்த நெருப்பு அருகிலிருந்த வைக்கோலுக்கு பரவி எரிய ஆரம்பித்தது.
ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் ரூ.3,500 மதிப்புள்ள வைக்கோல் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.