நாகை, மே. 14: திருமஞ்சன விழாவையொட்டி நாகை சவுந்தரராஜ பெருமாள் கருடவாகனத்தில் நேற்று எழுந்தருளி சேவை சாதித்தார். நாகை சவுந்தரராஜ பொருமாள் கோயில் திருஅவதார உத்ஸவ கடந்த 4ம் தேதி திருமஞ்ஜனத்துடன் விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினம் தோறும் காலை தீர்த்தபேரர் திருமஞ்ஜனமும், மாலை சுவாமி கண்ணாடி ஊஞ்சலில் எழுந்தருள் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை பெருமாள் கருட வானத்தில் எழுந்தருல் நிகழ்ச்சியும் பின்னர் போபுரவாசல் தீபாராதனையும் நடைபெற்றது. அதை தொர்ந்து மூலவர் பொருமாளுக்கு திருமஞ்சசனம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடகளை விழா குழுவினர், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.