×

காரைக்காலில் முதியவரிடம் செல்போன் பறித்துசென்ற 2 பேர் கைது

காரைக்கால், மே 14: காரைக்கால் பேருந்து நிலையத்தில், பேசிகொண்டிருந்த ஒருவரிடமிருந்து செல்போனை பிடிங்கி சென்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் தோமாஸ் அருள்வீதியை சேர்ந்தவர் மெய்னுல்லா(60). இவர் நேற்று காரைக்கால் பேருந்து நிலையத்தில், கூட்டம் இல்லாத பகுதியில் நின்று செல்போனில் பேசிகொண்டிருந்தார். அப்போது, காரைக்கால்மேடு அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பரத்(20), அவரது நண்பர் அக்கரைவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(20) ஆகிய இருவரும், மெய்னுல்லாவின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து, மெய்னுல்லா நகர காவல்நிலையத்தில், செல்போனின் இ.எம்.ஐ எண்ணுடன் புகார் கொடுத்தார். அதை வைத்து, நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, காரைக்கால் மேடு அருகே நின்றுகொண்டிருந்த பரத் மற்றும் தமிழ்செல்வன் என்ற  இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.16 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags : persons ,elder ,Karaikal ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...