×

குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் ஓய்வு அலுவலர்கள் வலியுறுத்தல்

நாகை, மே 14: குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர். நாகை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் ரெத்தினம் வரவேற்றார். 1.1.2019 முதல் மத்திய அரசு அறிவித்த 3 விழுக்காடு அகவிலை படியினை உடனே  வழங்க வேண்டும், ஓய்வூதியர் இறந்தால்  தற்பொழுது வழங்கி வரும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்தை ரூ.1லட்சமாக உயர்த்தி  வழங்க வேண்டும்,  தமிழக அரசு தற்போது வழங்கி வரும் மருத்தவப்படி ரூ.300யை மத்திய அரசு வழங்குவது போல் ரூ.1,000மாக உயர்த்தி வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850யை மத்திய அரசு வழங்குவது போல் ரூ.9 ஆயிரமாக  உயர்த்தி வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் அண்ணாசாமி, பொருளாளர் சிங்காரவேல், துணை தலைவர்கள் சேமசுந்தரம், அரங்கராமானுஜம், வேலுச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : insurers ,
× RELATED பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும்100% ...