×

தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை பிரசார கூட்டம்

தோகைமலை, மே 14: தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடந்தது. கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பேருந்து நிலையம்  அருகே தெருமுனை பிரசார  கூட்டம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடந்தது.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  இலக்குவன் பேசினார். அப்போது தோகைமலையில் உள்ள வாரசந்தையை பல போராட்டங்கள் நடத்தி அடிப்படை வசதிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கிய நிலையில், வாரசந்தைக்கான  கட்டுமான பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் வாரச்சந்தைக்கான பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்றிய ஆணையர்  ராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளால் தோகைமலை வாரச்சந்தைக்கான கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் 6ம் தேதி அன்று பணிகள் தொடங்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்தனர். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், சங்கபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Marxist Communist Party Street Campaign ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா