×

பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கை வசதியின்றி பயணிகள்அவதி

கரூர், மே 14: பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கை வசதி செய்ய பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்தகருப்பத்தூர் நெடுஞ்சாலை சிம்மபுரீசுவரர் சிவன்கோயில் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இதில் பயணிகளுக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. இருக்கைகள் போடப்படவில்லை. இருக்கைகளோ  அல்லது சிமென்ட் பெஞ்ச் அமைக்க வேண்டும். இருக்கை இல்லாததால் வெகுநேரம் பேருந்திற்காக  நின்றுகொண்டேஇருக்க வேண்டியதிருப்பதாக  என பயணிகள் தெரிவித்தனர்.எனவே பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கை வசதி அமைத்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Passengers ,bus stop ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!