×

மக்கள் விரோத மோடி அரசு தூக்கி எறியப்படுவது உறுதி பரமத்தியில் வைகோ பேச்சு

கரூர், மே 14: மக்கள்விரோத மோடிஅரசு தூக்கி எறியப்படுவது உறுதி  என வைகோ பேசினார். அரவக்குறிச்சிதொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுகவேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ நேற்று க.பரமத்திஒன்றியத்தில் பிரசாரம்செய்தார். அப்போது அவர் பரமத்தியில் பேசுகையில், ஏழ்மையில் தவிக்கும் மக்களுக்கு 25ஆயிரம் குடும்பங்களுக்கு 3சென்ட் நிலம் தருவதாக யாரும்அறிவிக்காத திட்டத்தை செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார், இதனை தமிழகம் முழுவதும்ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்துவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே 18தொகுதி, தற்போது 4தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகதான்வெற்றிபெறும்.உங்களது கோரிக்கை நிறைவேறும்.
இதுபோன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.மக்கள்விரோத மோடிஅரசு தூக்கி எறியப்படுவது உறுதியாகிவிட்டது. தேர்தல் முடிந்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிசெய்கின்றனர். காவிரியில் தண்ணீரின்றிபோன நிலையில் இத்திட்டதையும்கொண்டுவந்து விவசாயிகளைஅகதிகளாக்க பார்க்கின்றனர்.

Tags : Vaiko Talks ,Seemandhra ,Modi ,government ,
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...