×

ராயனூர்-செல்லாண்டி பாளையம் பிரிவு சாலையில் பேரிகார்டு இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்

கரூர், மே 14: ராயனூர் செல்லாண்டிபாளையம் பிரிவுச் சாலையில் விபத்துக்களை கட்டுப்படுத்த பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் திருமாநிலையூர் பகுதியில் இருந்து ராயனூர் செல்லும் சாலையில் செல்லாண்டிபாளையம் செல்வதற்கான சாலை பிரிகிறது. இந்த பிரிவுச் சாலையோரம் பெட்ரோல் பங்க் செயல்படுகிறது.  இதன் காரணமாக, இந்த பிரிவுச் சாலையோரம் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கரூர் ராயனூர் இடையே அதிகளவு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், பிரிவுச்சாலையில் வாகனங்கள் பிரிந்து செல்லும் போது அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் செல்லாண்டிபாளையம் பிரிவு அருகே பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும், இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கபபடவில்லை. எனவே, இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accident ,Raayanur-Chelandi ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...