×

துறையூரில்

துறையூர், மே 10:  துறையூரில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை உள்பட ரூ. ஒரு லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். துறையூர்  ஆத்தூர் சாலையில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சேகர்(65). இவர் விடுமுறைக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு  கோயமுத்தூர் சென்றுள்ளார். இதையறிந்து கொண்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம்  வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை கடப்பாறையால் உடைத்து  அதிலிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கம், பூஜை அறையில்  வைத்திருந்த ரூ.35 ஆயிரம் உள்பட வெள்ளி பொருட்களை அள்ளி சென்றனர்.

அக்கம்  பக்கத்தில் உள்ளவர்கள் கதவு திறக்கப்பட்டிருப்பதையறிந்து கோயமுத்தூரில் உள்ள வீட்டு உரிமையாளர் சேகருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோயமுத்தூரில் இருந்து நேற்று மாலை ஊருக்கு வந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் திருடு போய் இருப்பதை அறிந்தார். இதுகுறித்து துறையூர் போலீசாருக்கு புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி