ஏர்போர்ட், மே 10: சிங்கப்பூரில் இருந்து தினமும் பிற்பகல் 3 மணிக்கு திருச்சிக்கு வந்து, மீண்டும் மாலை 4.10 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் நேற்று முன்தினம் மாலை சரியான நேரத்திற்கு வந்தது. ஆனாலும் 2.30 மணி நேரம் தாமதமாக மாலை 6.40 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
இதேபோல் சார்ஜாவில் இருந்து தினமும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அதிகாலை 2.30 மணிக்கு திருச்சிக்கு வந்து, 3.20 மணிக்கு மீண்டும் சார்ஜா நோக்கி புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் இந்த விமானம் நேற்று முன்தினம் அதிகாலை தாமதமாக 4 மணிக்கு திருச்சிக்கு வந்தது. பின்னர் 2 மணி நேரம் தாமதமாக காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த இரண்டு விமானங்களும் தாமதமானதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.