×

ரயில் முன் பாய்ந்து மூதாட்டி தற்கொலை

ஈரோடு, மே 10:  ஈரோடு காவிரி ஆர்எஸ்.,க்கும் ஆனங்கூர் ஆர்எஸ்.,க்கும் இடைப்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. எஸ்எஸ்ஐ சுகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எஸ்பிபி காலனியை சேர்ந்த கந்தசாமி மனைவி வீரம்மாள் (65) என தெரியவந்தது.

இவரது கணவர் பிரிந்து சென்ற பிறகு அவரது மகன் சரவணன் வீட்டில் வசித்து வந்தார். வீரம்மாளை அவரது மகன், மகள் வீட்டில் சென்று இருக்குமாறு மனவேதனையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மூதாட்டி உடலை மீட்ட போலீசார் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை