×

சன் சிங்கர் இசை நிகழ்ச்சி குரல் தேர்வு திருச்சியில் 12ம் தேதி நடக்கிறது 14 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம்

திருச்சி, மே 10: சன் டி.வியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக உள்ள சீனியர்களுக்கான சன் சிங்கர் இசை நிகழ்ச்சிக்கான முதல் கட்ட நேர்முக குரல் தேர்வு திருச்சி மாநகரில் வரும் 12ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 14 வயதுக்கு உட்பட்டோர் தனியாகவோ, ஜோடியாகவோ அல்லது இசைக் குழுவாகவோ இந்த தேர்வில் பங்கேற்கலாம். குழந்தைகளின் இசைத் திறமையை அடையாளம் கண்டு, அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் சன் சிங்கர் இசை நிகழ்ச்சி சன் டிவி நேயர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஒன்று. கடந்த 7 சீசன்களாக நடந்த சன் சிங்கர் நிகழ்ச்சி மூலம், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் இசை திறமையை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியது உங்கள் சன் டி.வி. இதன் தொடர்ச்சியாக 14 வயதுக்கு மேற்பட்டோரின் இசை திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சன் சிங்கர் சீன் 8 ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல்கட்ட குரல் தேர்வு திருச்சி மாநகரில் வரும் 12ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. திருச்சி காஜாமலை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் 12ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் நேர்முக குரல் தேர்வு நடைபெறுகிறது. 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியாகவோ அல்லது இருவராகவோ கலந்து கொள்ளலாம். இசைக்குழுவாகவும் தேர்வில் பங்கேற்கலாம்.'

Tags : Sun Singer Music Voice ,Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...