×

மாணவருக்கு உதவிய போலீஸ்காரருக்கு பாராட்டு

கோவை, மே 10: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு நடந்தது. இதில் பங்கேற்க வந்த மாணவர் ஒருவர் போட்டோ இல்லாததால் தேர்வு எழுத முடியாத நிலையிருந்தது. அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சரவணக்குமார் 40 ரூபாய் கொடுத்து போட்டோ எடுக்க உதவி செய்தார். இதை பாராட்டி, நேற்று போலீஸ்காரர் சரவணக்குமாரை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், துணை கமிஷனர் பாலாஜி ஆகியோர் நற்சான்று வழங்கினர்.  இதேபோல் கோவை நகரில் கடந்த 2 ஆண்டாக பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க உதவியதற்காக சப் இன்ஸ்பெக்டர் சாஸ்தா மற்றும் போத்தனூரில் ஆதாய கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க உதவிய சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர்களையும் போலீஸ் கமிஷனர் பாராட்டி நற்சான்று வழங்கினார்.

Tags : policeman ,student ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...