×

பெண்ணை ஏமாற்றி நகை, பணம் மோசடி செய்தவர் கைது

கோவை, மே 10:கோவை சுந்தராபுரத்தில் பெண்ணை ஏமாற்றி நகை, பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.  கோவை சுந்தராபுரம் ஏ.வி.ஜி.லே அவுட் பகுதியை சேர்ந்தவர் தீபா(40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் தன்னுடைய கணவர் செல்வராஜை பிரிந்து கோவை காந்திபுரம் முதல் தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார்(46), என்பவருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தீபா தன்னுடைய வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் ரூபாயும், 32 பவுன் நகையையும் கிருஷ்ணகுமாருக்கு கொடுத்துள்ளார்.

 இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு தீபா தன்னுடைய பணம் மற்றும் நகையை திரும்ப தருமாறு கிருஷ்ணகுமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகுமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தீபா அவரைப்பற்றி அக்கம்பக்கத்தில் விசாரித்து பார்த்துள்ளார். அதில் அவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து பணம், நகையை மோசடி செய்ததும், மேலும் சில பெண்களிடமும் இது போன்று மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தீபாவுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதில், கிருஷ்ணகுமார், தீபாவை தகாதவார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் தீபா கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டார்.

Tags :
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்