×

சூலூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு கிறிஸ்தவ இயக்கம் ஆதரவு

சூலூர்,மே10;சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக  வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி போட்டியிடுகிறார். இந்நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவை டிஈஎல்சி - யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் டாக்டர்.ஈ.டி.சார்லஸ் தலைமையில் குருமார்கள் சந்தித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது எ.வ.வேலு அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.  இதைத்தொடர்ந்து, டிஈஎல்சியின் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேவாலயத்தில்  நடைபெற்றது. இதில் சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பது. அவர் வெற்றிபெற அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என  சிறுபான்மை மக்களை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக டாக்டர் ஈ.டி.சார்லஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மே மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அனைத்து கிறிஸ்தவ சிறுபான்மை மக்களும் திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினோம், அதன்படி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அனைவரும் வாக்களித்தோம். அதில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள சூலூர் உள்ளிட்ட 4 இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்.  சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருகூர், சூலூர், பட்டணம், சாமளாபுரம், காமநாயக்கன் பாளையம், வாரப்பட்டி உள்ளிட்ட பகுதியிகளில் 2500 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தவர் அனைவரும் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்று கூறினார்.  இச்சந்திப்பின்போது குருமார்கள் ஜெயசந்திரன், ஜெயராஜ், வில்சன், ஸ்டேன்லி மற்றும் காந்தி, ராஜேந்திரன், பாஸ்கர், திவாகர், பென்னி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Tags : Christian Movement ,candidate ,DMK ,Sulur ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...