×

பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

கோவை,மே.10: ஊழல் முறைகேடு, நிர்வாக சீர்கேடு ஆகியவற்றில் சிக்கிதவிக்கும் தொலைத்தொடர்பு கூட்டுறவு சங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று சங்க அலுவலகத்தை பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாதம் தவறாமல் ஊழியர்களிடையே சேமிப்பு என்ற பெயரில் பணத்தை பிடிக்கும் கூட்டுறவு சங்கம் அவசரதேவைக்குகூட கடன் வழங்காமல் கூட்டுறவு சங்கத்தையே சீர்குலைப்பதாக தொடர்ந்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக அவசர தேவைக்கு கூட கடன் வழங்காமல் இழுத்தடித்து ஊழல் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள தொலைத்தொடர்புத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது: அனைத்து ஊழியர்களிடமும் மாதம் தவறாமல் கூட்டுறவு சங்கத்திற்கு என ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 6 மாத காலமாக உறுப்பினர்களுக்கு அவசர தேவைக்கு கூட கடன் கொடுப்பதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை அனைவருக்கும் டிவிடெண்ட் என்பது உறுதியாக கிடைத்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக இழுத்தடித்து வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளில் அதிருப்த்தியடைந்து வெளியேறிய உறுப்பினர்களுக்கு கடந்த ஏழு மாத காலமாக கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கவில்லை. உறுப்பினர்களின் மரணத்திற்கு பிறகு அவர்கள் குடும்பத்திற்கு சேரவேண்டிய தொகையையும் வழங்காமல் கூட்டுறவு சங்கத்தையை சீர்குலைத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறினர்.

Tags : BSNL ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...