×

கோவை அருகே வீடுகளில் நகை, பணம் கொள்ளை

கோவை, மே10:  கோவை அருகே 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  கோவையை அடுத்த விளாங்குறிச்சி ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் சந்தானம்(36). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வழக்கம்போல மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாபை மர்மநபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக சந்தானம் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
 கோவை அடுத்த இடிகரை மணியக்காரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (60). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.

Tags : homes ,Coimbatore ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை