×

தென் பழனியாண்டவர் கோயிலில் கோடாபிஷேகம்

கும்பகோணம், மே 10: கும்பகோணம் தென்பழனி ஆண்டவர் கோயிலில் ஒவ்வொரு சித்திரை மாதத்தில் கோடாபிஷேக விழா, பாமாலை சாற்று விழா  நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 7ம் தேதி  காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து நேற்று (9ம் தேதி) காலை காவிரி படித்துறையிலிருந்து வேல், பால்குடம், காவடிகள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் தென்பழனியாண்டவரின் படைகளின் போர்வீரர்கள் போல் வேடமணிந்திருந்தனர். இன்று (10ம் தேதி)  சந்தனகாப்பு அலங்காரம், சாமி புறப்பாடு நடக்கிறது. நாளை தென்பழனியாண்டவருக்கு பழங்கள் அலங்காரம் நடக்கிறது.

Tags : South Palaniya ,
× RELATED தி.க. கலந்துரையாடல் கூட்டம்