×

வீரகனூரில் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு அடி, உதை

கெங்கவல்லி, மே 10:  வீரகனூர் 3வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(32). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி மாதேஸ்வரி(25). அதே பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து(45). மின்வாரிய ஊழியரான இவரது தம்பி செந்தில்குமார்(40). இவர்களுக்கும், முருகன் குடும்பத்திற்கும் வழித்தட தகராறு உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் அங்கமுத்து கழிப்பிடம் கட்டும் பணியில் ஈடுபட்டதால் மாதேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அங்கமுத்து, செந்தில்குமார் ஆகியோர் குடிபோதையில் சென்று வீட்டில் தனியாக இருந்த மாதேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதில், மயங்கி விழுந்த மாதேஸ்வரியை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், அங்கமுத்து மற்றும் அவரது தம்பி செந்தில்குமார் மீது மானபங்கம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை அங்கமுத்து மற்றும் அவரது தம்பி செந்தில்குமாரை போலீசார் கைது செய்யாமல், அலட்சியம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செந்தில்குமார் அவரது நண்பர்களுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீரகனூரில் உள்ள  ஒரு ஓட்டலில் சாப்பிடும் போது ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசாரை தாக்க முயன்ற வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .  

Tags : house ,baby ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை