×

விளையாட்டு வீரர்கள் தேர்வு

கிருஷ்ணகிரி, மே 10: கிருஷ்ணகிரியில், பள்ளிகள் மற்றும் விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.2019-2020ம் ஆண்டிற்கான மாணவர் மற்றும் மாணவியரிடமிருந்து, விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டுப் பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வழங்கி போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.. அவர்களுக்கான தேர்வுப் போட்டிகள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டித் தேர்வை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த பாபுராஜேந்திரன் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், வாலிபால் பயிற்றுனர் அற்புத ராஜேந்திரன், டேக்வாண்டோ பயிற்றுனர் ராஜகோபால், கால்பந்து பயிற்றுனர் அப்துல்லா ஷா  மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் நன்றி கூறினார்.இதில், ஆண், பெண் இருபாலருக்கும் தடகளம், கால்பந்து, கைப்பந்து, கையுந்து பந்து, தேக்வாண்டோ, வளைகோல் பந்து, கபடி, ஜூடோ, கிரிக்கெ, கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகளுக்கான தேர்வுப் போட்டிகள் நடந்தது. இதில், 140 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 20 மதிப்பெண் வீதம், ஐந்து வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில் 8 மதிப்பெண்களும், பெண்கள் பிரிவில் 7 மதிப்பெண்களும் பெற்றவர்கள் விளையாட்டு விடுதிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : athletes ,
× RELATED திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை...