×

பொன்னமராவதியில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் விளம்பர பேனர்கள் வைக்க தடை

பொன்னமராவதி, மே10: பொன்னமராவதியில் நெடுஞ்சாலை துறையினருக்கு சொந்தமான இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளக்ஸ் வைத்திருந்தால் இன்று (10ம்தேதி) காலை 8 மணிக்குள் உரிமையாளர்களே அப்புறப்படுத்த வேண்டும். மீறினால் நெடுஞ்சாலைத்துறையினரால் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த காலங்களில் பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர்  சுலைமான் சேட் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பர பலகைகள் வைக்க முழு தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.

மேற்கொண்டு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் விளம்பர பதாகைகள் தொடர்ச்சியாக வைத்து கொண்டுதான் உள்ளார்கள். பேரூராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பும்,  கண்துடைப்பு அறிவிப்பாக இல்லாமல்  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொன்னமராவதி பகுதி பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

Tags : highway ,Ponnaravarai ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு