×

பொன்னமராவதி பகுதியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

பொன்னமராவதி,மே 10: பொன்னமராவதி  பகுதியில் கிராமங்கள் தோறும் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பகுதியில் தொடர்ந்து மழை பொய்த்து வருவதால் கண்மாய், குளங்கள் எல்லாம் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றது. இதனால் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீைர் இன்றி சிரமப்படுகின்றன. ஒரு சில கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் மூலம் கால்நடைகள் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பொன்னமராவதி ஒன்றியத்தில் 200க்கு மேற்பட்ட கிராமங்களில் இந்த தொட்டிகள் அமைக்கப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு குடிநீர் பைப்கள் மூலம் தண்ணீர் பிடித்து கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் வழங்கி வருகின்றனர். எனவே கடும் வறட்சியை கருத்தில் கொண்டு கால்நடைகள் குடிக்க தண்ணீர் வசதியுடன் குடிநீர் தொட்டிகள் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Ponnaravaradi ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி