×

அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் வழக்கறிஞர் மீது வழக்கு

அரியலூர், மே 10: அரியலூரில் அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் மீது போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
அரியலூர் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் கணேசன். அதிமுக மாவட்ட அவைத் தலைவராக உள்ளார். இவருக்கும், இவரது சகோதரர் மாரிமுத்துவிற்க்கும் சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் கைலாசநாதர் கோயில் தெருவில் உள்ளது. இவர்களது இடத்தின் மேற்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகனும், வழக்கறிஞருமான செந்தில்குமாருக்கு சொந்தமான கட்டிடமும் உள்ளது.

இந்நிலையில், கணேசனுக்கு சொந்தமான கட்டடத்தின் சுவற்றை உடைத்து, அங்கு வழக்கறிஞர் செந்தில்குமார் செட் போட்டுள்ளார். இதுகுறித்து கேட்ட கணேசனை, செந்தில்குமார் தகதாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணேசன் அளித்த புகாரின் பேரில் அரியலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

Tags : murder threat lawyer ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...