×

தேர்தல் நடத்தை விதி அமல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாய கூடம்

கரூர், மே 10:  கரூர் நகராட்சி கோடங்கிப்பட்டியில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் கட்டி முடிக்கப்பட்டும் சமுதாய கூடம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்டபகுதி கோடங்கிப்பட்டி. இப்பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. புதிதாக சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டும் இன்னமும் திறப்பு விழா காணாமல் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி திறக்காமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தலுக்கு முன்னரே சமுதாய கூடத்தை திறந்திருந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருந்திருக்கும். எனினும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும்வரை காத்திருப்பதை தவிர வழியில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...