×

கரூர் ஆதி விநாயகர் கோயில் தெரு சாலையில் சாக்கடை வடிகாலில் சிக்கி விபத்துக்குள்ளாகும் டூவீலர்கள் சிலாப் அமைக்க கோரிக்கை

கரூர், மே 10: கரூர் ஆதி விநாயகர் கோயில் தெரு சாலையில் திறந்து கிடக்கும் சாக்கடை வடிகாலுக்கு சிமெண்ட் சிலாப் மூடி அமைக்காததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி காயமடைகின்றனர். எனவே சாக்கடை வடிகாலுக்கு மூடி அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பிரிவு பகுதியில் இருந்து மாரியம்மன் கோயில் செல்லும் பிரிவு சாலை வரை ஆதி விநாயகர் கோயில் சாலை உள்ளது. குறிப்பிட்ட தூரம் வரை குறுகிய சாலையாக உள்ள இந்த சாலையோரம், நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், அரசு பள்ளியை ஒட்டியுள்ள சுவரோரம் சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த சாக்கடை வடிகால் திறந்த நிலையில் உள்ளது. இந்த வழியாக செல்லும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க இடம் இல்லாமல் வடிகால் மீது விழுந்து காயமடைந்து செல்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் குறுகிய சாலை என்பதால் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய வாகனங்கள் ஒரு சேர செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே, இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் வகையில், சாக்கடை வடிகால் மீது சிமெண்ட் சிலாப் மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : pilgrims ,Karoor Adi Vinayakar Temple Road ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்