×

உலக நன்மை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை

பெரியகுளம், மே 10: பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் அட்சய திரிதியை முன்னிட்டு அகண்ட ஹரேராம மகாமந்திர கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக திருப்பாதுகைக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள், மதுரகீதம் பஜனை நடைபெற்றது. கிருஷ்ண அஷ்டோத்திரம், லட்சுமி அஷ்டோத்திரம் அர்ச்சனையும், மாதுரி ஸகி ஸமேத பிரேமிகவரதன் ஸ்வாமிக்கு விசேஷ திருமஞ்சனமும் சிறப்புற நடைபெற்றது. 108 நெய் தீபம் ஏற்றப்பட்டு தீப வழிபாடும் நடைபெற்றது.

மஹாரண்யம் முரளீதரஸ்வாமியின் சீடர் கிருஷ்ணசைதன்யதாஸ் வழிபாடு குறித்தும் நாமம் மகிமை பற்றியும், அட்சய திரிதியை நாளில் கூறப்படும் நாமத்தின் நற்பலன்கள் அட்சயமாக வளர்ந்து பலமடங்கு பயனைத்தரும் என்ற நாமகீர்த்தன மகிமை குறித்து விளக்கி கூறினார். உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், குழந்தைகள் கல்வி செல்வம் நலன் வேண்டியும் வியாபாரம் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

Tags : world ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...