×

அக்னி வெயில் நுங்கு வியாபாரம் பெரியகுளத்தில் ஜோர்

பெரியகுளம், மே 10: அக்னி வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நுங்கை தேடுவதால், பெரியகுளம் பகுதியில் நுங்கு வியாபாரம் களைகட்டியுள்ளது.அக்னி நட்சத்திர காலம் என்பதால் வெப்பத்தின் கொடூரம் தாங்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனால் வெப்பத்தை தணிக்க குளிர்பானக் கடைகளை நாடி செல்கின்றனர். ஆனால், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பனை மர நுங்கினை மக்கள் அதிகம் நாடுகின்றனர். நுங்கு சாப்பிடுவதால் உடல் சூட்டினை தவிர்ப்பதுடன் உடல் சோர்வையும் நீக்குகிறது. தற்போது பொதுமக்கள் இந்த நுங்கினை அதிகம் தேடி செல்வதால் கடந்த ஆண்டு ஒரு நுங்கு ரூ.2க்கு விற்பனையான நிலையில், தற்போது ஒரு நுங்கின் விலை ரூ.10க்கு விற்பனையாகி வருகிறது. ஆனால், இப்பகுதியில் நுங்கின் விற்பனை களைகட்டியுள்ளது.

Tags : business giant ,
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...