×

திருச்செந்தூரில் மீனவரை தாக்கி கொல்ல முயற்சி

திருச்செந்தூர், மே 10: திருச்செந்தூர் அமலிநகரில் மீனவரை  கொல்ல நடந்த முயற்சியால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் அமலிநகரில் நேற்று முன்தினம் இரவு ஒரு திருமண வைபவத்தையொட்டி ஊர்வலம் நடந்தது. அமலிநகர் ரோஸ்காலனியை சேர்ந்த மீனவர் ஜாய்ஸ் (39) இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில் ஜாய்ஸ்ைச மர்ம நபர்கள் தாக்கி கொலை செய்ய முயன்றனராம். தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜாய்சை உறவினர்கள் மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார், அமலிநகர் சுரேந்திரன், கவுதம் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த  சம்பவத்தால் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : fisherman ,Thiruchendur ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...