×

தேர்தல் காரியாலயம் தூத்துக்குடியில் திறந்தது அதிமுக

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலய திறப்பு விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ் பங்கேற்றனர். ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு, தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ள பாகம் எண்கள் 75 முதல் 91 வரையும் மற்றும் 230, 231 ஆகிய பகுதிகளுக்கான தேர்தல் காரியாலயம் தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திறப்புவிழா அமைப்புச் செயலாளர்  செல்லப்பாண்டியன்  தலைமையில் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். தேர்தல் காரியாலயத்தை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

விழாவில் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், அமைப்புச் செயலாளர்கள் முருகையா பாண்டியன் எம்எல்ஏ, மனோஜ் பாண்டியன்,  எம்எல்ஏக்கள் ராதாபுரம் இன்பதுரை, தென்காசி செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ  சக்திவேல் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர். தொடர்ந்து சங்கரபேரி, பண்டாரம்பட்டி, தேவர் காலனி, எம்ஏசி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக வாக்குசேகரித்தனர். இதில் மாவட்ட இளைஞரணி மூர்த்தி, மகளிரணி குருத்தாய், பூத் பொறுப்பாளர் ஜீவாபாண்டியன், போக்குவரத்து பிரிவு நிர்வாகி சங்கர், புறநகர் செயலாளர் முருகன், மில்லைராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : office ,Thoothukudi ,AIADMK ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...