×

திமுக வேட்பாளரை ஆதரித்து திருநாவுக்கரசர் தீவிர பிரசாரம்

திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் முன்பு நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவருடன் திமுக மாநகர் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் தளபதி உடனிருந்தார். அப்போது பேசிய திருநாவுக்கரசர், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும். மோடி அலை வீசவில்லை. வெளிநாட்டில் கருப்பு பணத்தை மீட்டு அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் மோடி இதுவரை ஒரு ரூபாய் கூட போடவில்லை.

தூய்மையான ஆட்சி நடத்துகிறேன் என்று கூறி போர் விமானம் வாங்கியதில் ஒரு லட்சம் கோடி ஊழல் செய்தவர் தான் இந்த மோடி. மக்கள் ஜெயலலிதாவிற்கு  தான் வாக்களித்தார்களே தவிர ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்க்கு வாக்களிக்கவில்லை. இந்த ஆட்சியால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும். மத்தியிலும் ஆட்சி மாற்ற வேண்டும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும்’’ என பேசினார்.

Tags : Thirunavukarajar ,campaign ,candidate ,DMK ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...