×

வீட்டை மீட்டுத்தாருங்கள் மாற்றுத்திறனாளி பெண் புகார்

ராமநாதபுரம், மே 10: ராமநாதபுரம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஜேசுதாசன் மகள் ஆரோக்கியமேரி (35). நடக்க முடியாத மாற்றுத்திறனாளி, திருமணமாகவில்லை. தாய், தந்தை இறந்த விட்டனர். மூன்று சகோதரர்கள். இருவர் வெளிநாட்டில் உள்ளனர். முத்துப்பேட்டையில் உள்ள பூர்வீக வீடு ஆரோக்கியமேரியின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த சகோதர் சகாயசுதாகர், அவரது மனைவி செவன்கிறிஸ்டி இருவரும் ஆரோக்கியமேரியை துன்புறுத்தி வீட்டை அபகரித்து துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆரோக்யமேரி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். அதில், எனது தந்தை பூர்வீக வீட்டை எனது பெயரில் எழுதி வைத்தார். தனது பெயரில் உள்ள வீட்டை மீட்டு தாருங்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...