×

சிவகிரியில் துணிகரம் தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை

சிவகிரி, மே 10: சிவகிரி மேலரதவீதியை சேர்ந்தவர் ஆனைக்குட்டி மகன் காளிமுத்து (29). கூலித்தொழிலாளியான இவர், மனைவி திவ்யா (25), மகன்கள் கார்த்திக் (7), தனுஷ் (4) மற்றும் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். பள்ளி விடுமுறையை முன்னிட்டு திவ்யா, குழந்தைகளுடன் பழநியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காளிமுத்துவும், அவரது தந்தையும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.
மதியம் காளிமுத்து வீடு திரும்பிய போது வீடு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 கிராம் தங்க நகைகளுடன், அவரது ஏடிஎம் கார்டும் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து காளிமுத்து சிவகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jewelery looter ,house robbery ,Sivagiri ,jeweler ,
× RELATED குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது