×

அரசு பொதுத்தேர்வுகளில் ெலட்சுமி வித்யா நிகேதன் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

அம்பை, மே 10:  அம்பையில் டாக்டர் லெட்சுமி அம்மாள் தலைமையில் இயங்கி வரும் லெட்சுமி வித்யா நிகேதன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில், நடந்து முடிந்த 10ம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும். தற்போது பள்ளியில், எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கல்வியில் மட்டுமின்றி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடனம், சிலம்பம், கராத்தே, ஓவியம், கைவினை பொருட்கள் செய்தல் போன்ற அனைத்து துறையிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதேபோல் விளையாட்டு போட்டியில் கால்பந்து விளையாட்டிற்கு சிறந்த பயிற்சியாளர்களை கொண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச கம்யூனிகேடிவ் இங்கிலீஷ் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் கேஜி பிரிவில் 3 எச் முறையில் கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் அரிதான இக்கல்வி முறை உணர்வுபூர்வமாக அறிந்து செயல்முறை கற்றல் மூலம் கற்பிக்கப்படுகிறது.

Tags : Selvam Vidya Niketan School ,government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...