×

தென்காசி ஆர்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பிரிவுபசார விழா

தென்காசி, மே 10:  தென்காசி வீரமாமுனிவர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மருதுபாண்டியன் பணி நிறைவு பெற்றதையடுத்து பிரிவுபசார விழா நடந்தது. விழாவிற்கு புனிதமிக்கேல் அதிதூதர் ஆலய வட்டார அதிபரும், பள்ளியின் தாளாளருமான சகாயசின்னப்பன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை மேரிகாஞ்சனா வரவேற்றார். பாளை ஆர்.சி.பள்ளிகளின் கண்காணிப்பாளர் வியாகப்பராஜ், மருதுபுரம்புதூர் விஜயன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன், ஓய்வுபெற்ற முதன்மை கல்வி அலுவலர் ஜெயங்கண்ணு, சகோதரர் பாலசுப்பிரமணியன், புனிதமிக்கேல் அதிதூதர் ஆலய உதவி பங்குத்தந்தை சுதன், சகாயதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் தலைமை ஆசிரியரின் வாழ்க்கை தொகுப்பு, ஆசிரியர்கள் மனதில் தலைமை ஆசிரியர், உறவினர்கள் வாழ்த்துரை, மலரும் நினைவுகள் உள்ளிட்டவை கணொலி மூலம் காண்பிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் மருதுபாண்டியன் ஏற்புரை ஆற்றினார். கணித பட்டதாரி ஆசிரியை சுபாரெக்ஸி நன்றி கூறினார்.

Tags : ceremony ,head teacher ,Tenkasi RC School ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா