×

பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

மதுரை, மே 10: ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் வெஸ்டன். இவரது மனைவி சாந்தமணி. இவர் கடந்த மாதம் கள்ளழகர் திருவிழா காண மதுரை வந்தார். ஆரப்பாளையத்தில் இருந்த கோரிப்பாளையத்திற்கு டவுன் பஸ்சில் வந்தார். கோரிப்பாளையத்தில் பஸ்சை விட்டு இறங்கும்போது, அவரது கைப்பையை காணவில்லை. அதில் 7 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இதுகுறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தார். சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பிறகு, இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்க 2,830...